சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியது. அதிகாலையில் தொடங்கிய பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது சிரமமாக இருந்தது. புறநகர் மின்சார ரயில்களும் திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை வழித்தடங்களில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.