சென்னை தண்டையார்பேட்டையில், பள்ளியிலிருந்து உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 8 வயது சிறுமி, வாகனம் கவிழ்ந்ததில் கீழே விழுந்து, பின்னால் வந்த குப்பை லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். முன்பக்கம் கியாஸ் சிலிண்டர் வைக்கப்பட்டதால் வாகனம் பாரம் தாங்காமல் சாய்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.