சென்னை பெருநகர காவல் எல்லையில் சைபர் குற்றவாளிகள் மீது சைபர் க்ரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், சைபர் குற்றவாளிகளிடம் இருந்து ரூ. 2.11 கோடி பணம் மீட்கப்பட்டு, 94 புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.