கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாரயம் அருந்தி 67 பேர் பலியாகினர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குமரேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘கள்ளச் சாரயம் அருந்துவது சட்ட விரோதமான செயல். சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களுக்கு கூட ரூ. 1 லட்சம் மட்டுமே ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் ரூ. 2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில், கள்ளச் சாரயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு மட்டும் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவது சட்ட விரோத செயலை ஊக்கப்படுவது போல் ஆகிவிடும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்குவதன் மூலம் சுமார் ரூ. 6. 5 கோடி, மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது. அவ்வளவு தொகையை செலவு செய்ய உயிரிழந்தவர்கள் யாரும் தியாகிகள் கிடையாது. எனவே, கள்ளச் சாரயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சத்தை இழப்பீடாக அரசு வழங்கக் கூடாது என உத்தவிட வேண்டும் என கோரியிருந்தார்.