சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமாரை காவல்துறையினர் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே நண்பர்களுடன் பதுங்கியிருந்த விஜயகுமாரை கைது செய்ய முயன்றபோது, அவர் காவல்துறையினரை தாக்கியுள்ளார். தற்காப்பு நடவடிக்கையாக, காவல்துறையினர் விஜயகுமாரின் காலில் சுட்டுள்ளனர். மேலும், அவரது கூட்டாளிகளான கவுதம் மற்றும் நிரஞ்சன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.