தற்போது நிலவி வரும் கடுமையான கோடை வெயில் காரணமாக, பயணிகள் பணத்தை பொருட்படுத்தாமல் ஏ.சி. வசதிக்காக கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயிலை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, அலுவலக நேரமான காலை மற்றும் மாலை வேளைகளில் ரயிலில் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும், ஏ.சி.யில் சொகுசாக பயணிக்கவும் பயணிகள் இந்த ரயிலை நாடுகின்றனர். ஜி.பி.எஸ் வசதியும் இதில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.