பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கரும்பருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடந்த 2019 ஆகஸ்டில் 828 கரும்பருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 500க்கும் மேற்பட்ட கரும்பருந்துகள் இங்கு முகாமிட்டுள்ளன. பொதுவாக வயநாடு, மலப்புரம் போன்ற கேரள பகுதிகளில் காணப்படும் கரும்பருந்துகள் தற்போது பள்ளிக்கரணைக்கு வந்துள்ளன.