சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் அண்ணாதுரை (56). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், அதே நிறுவனத்தில் வேலை செய்யும் 24 வயது பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். உடல் நலக்குறைவால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது தெரிய வர, பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று (மே 25) அண்ணாதுரையை கைது செய்தனர்.