சென்னை: உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய காதலன்.. இளம்பெண் புகார்

சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு இன்று (ஜனவரி 2) அதிகாலை 1 மணிக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். இவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண், வாய்மொழியாக தனது ஆண் நண்பர் என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் இரவு ரோந்து பணிக்கு சென்றுவிட்டனர். 

காவல் நிலையத்தில் பெண் காவலர் ஆர்த்தி மட்டும் இருந்தார். இதனால் அவர், காலையில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி உள்ளார். உடனே போதையில் இருந்த பெண், வேகமாக காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்த தனது ஸ்கூட்டரில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஒரு லிட்டர் பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி, எனக்கு நீதி வேண்டும். எனது ஆண் நண்பரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறி தீவைக்க முயன்றார். 

இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் காவலர் ஆர்த்தி, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பெண் உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் சம்பவம் குறித்து இரவு பணியில் இருந்த எம்ஜிஆர் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்முக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அம்மு, தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.

தொடர்புடைய செய்தி