சென்னை கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்த 55 வயதான எத்திராஜ், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 12 ஆம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்த அவர், திரு. வி. க பாலம் அருகே நேற்று காலை மிதந்த நிலையில் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.