ஜாம்பஜார் போலீசார் நேற்று காலை மல்லன் பொன்னப்பன் தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த அவரது உடைமைகளை சோதனை செய்ததில், 70 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜானகிராமன் என அடையாளம் காணப்பட்ட அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.