மாதவி அவர்களின் மகன் பிரகாஷ் வேலைக்குச் சென்ற நிலையில் குடிசை வீட்டில் தனியாக இருந்த 75 வயது மதிக்கத்தக்க மாதவி என்பவர் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக குடிசை வீடு தீ பற்றி எரிய தொடங்கியது. இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மதிக்கத்தக்க மாதவி என்ற மூதாட்டி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து தீ விபத்தில் உயிரிழந்த முதியவரின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இராயபுரம்
காசிமேடு சந்தையில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்