சென்னை: வாலிபர் கொலை.. 5 பேர் கைது

சென்னை மெரினா கடற்கரையில் ஆள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் அஜய் குமார் என்பவரிடம் ராஜ்குமார் என்பவர் செல்போனை பறித்து சென்றார். செல்போனை திருப்பி கேட்டபோது, ராஜ்குமார் நண்பர்களுடன் சேர்ந்து அஜய் குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த அஜய் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து ராஜ்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி