சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் லிஃப்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கடும் புகைமூட்டம் காரணமாக மாலுக்கு வந்த பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.