முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக எம்பி கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்களும் கலைஞரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.