2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் 146 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடிப் பரப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. மேலும், 2019-20 ஆம் ஆண்டில் 29 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கராக இருந்த இருபோக சாகுபடிப் பரப்பு 2023-2024 ஆம் ஆண்டில் 33 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் என்ற அளவினை எட்டியுள்ளது. இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக, 1,631 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி, 20 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 5,242 கோடி ரூபாய் நிதியானது, கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.