சென்னை: தொகுதி மறுவரையறை - ஸ்டாலின் மீது எல். முருகன் சாடல்

பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்தால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க. ஸ்டாலின் என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல். முருகன் சாடியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடூர திமுக ஆட்சியில் தமிழக மக்கள் படும் துயரம் ஒன்றல்ல இரண்டல்ல. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதைக் கலாச்சாரம், பெண்கள் தெருக்களில் நடமாட முடியாத நிலை, மதுவிற்பனையில் சாதனை, நாள் தவறாமல் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் என்று தமிழக மக்களின் துயரங்கள் தொடர்கின்றன. இந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் எண்ணற்றவை. தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியுமா என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்தால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க. ஸ்டாலின். அவரது விஷம்ப் பிரசாரத்தை நம்ப தமிழக மக்கள் தயாரில்லை. தமிழகத்தை குட்டிச்சுவராக்கும் திமுக ஆட்சி எப்போது அகலும் என்பது தான் தமிழக மக்களின் தற்போதைய எண்ணமும் எதிர்பார்ப்பும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி