சென்னை: மாதம்பட்டி நிறுவனம் தொடுத்த வழக்கு; கோர்ட்டு உத்தரவு

திருமணம் செய்து ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்த ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை டேக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதனால் தங்கள் நிறுவனத்திற்கு ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தது. மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை நீதிபதி செந்தில்குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி