அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அமைச்சராக இருந்தபோது, ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் ராஜேந்திர பாலாஜி மீது ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.