ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய், பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படும் ரசாயனங்களால் தயாரிக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நெய் மாதிரிகள் பரிசோதனையில் விலங்குக் கொழுப்பு கலந்திருந்தது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ரசாயனக் கலப்பும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.