தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (மே.21) இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, ராணிப்பேட்டை, சேலம், தேனி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.