தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) என்பது கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மத்திய அரசுத் திட்டமாகும். 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஏழை குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இலவச பயிற்சி, தங்குமிடம், உணவு மற்றும் வேலைவாய்ப்பு இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் இணைபவர்களுக்கு 2 - 6 மாதங்களுக்கு மாதம் ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.