தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரைப் போலீசார் சுட்டுப் பிடித்தனர். அவரைப் பிடிக்க முயன்றபோது, போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால் தற்காப்புக்காகப் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வன்முறை வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: பாலிமர்