லாரி மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலி

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி