ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பியபோது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேருந்தில் மின்கசிவு (Short Circuit) காரணமாகப் புகை பரவி விபத்து ஏற்பட்டது. உடனடியாகப் பேருந்திலிருந்து வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சாலையில் காத்திருந்த அவர்களுக்கு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை.