நெல்லை தியாகராஜ நகரில் முத்துமாலை (35) என்ற பெண், தகாத உறவில் இருந்ததாகக் கூறி அவரது தம்பி பன்னீர்செல்வம் மற்றும் நண்பர் சிவா ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தை முத்துமாலையின் 5 வயது மகள் நேரில் பார்த்துள்ளார். முத்துமாலையின் சித்தி மகன் இசக்கி பாண்டி இந்த கொலைக்கு உதவியதாகக் கூறி, காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய இருவரையும் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.