சென்னை மதுரவாயலில் பெரியப்பா மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ஆஷ் முகமதை தெலங்கானாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பணத்திற்காக அரை நிர்வாண புகைப்படத்தை காட்டி மிரட்டி வந்த நிலையில், பெண்ணை மும்பைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததை தொடர்ந்து ஆஷ் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.