மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்.!

உலகளவில் பெண்களை பாதிக்கும் பொதுவான புற்று நோய்களில் மார்பக புற்று நோய் ஒன்றாகும். இது பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் ஏற்படலாம். மார்பகத்தின் வெவ்வேறு பகுதிகள், சுரப்பிகள் அல்லது பால்குழாய்களில் தொடங்கும் கட்டி, மார்பக புற்றுநோயாக உருமாறுகிறது. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் மாதம் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் குறித்து மக்களுக்கு கற்பிப்பது இந்த மாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

தொடர்புடைய செய்தி