தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 2) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மாணவர்களுக்கு அரசின் நலத் திட்டங்களை இன்றே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக காலை சிற்றுண்டியில் மாணவர்களுக்கு உப்புமாவிற்கு பதிலாக வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் இன்று முதல் வழங்கப்பட்டது. அதேபோல் திங்கட்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த கோதுமை ரவை உப்புமா இனி வியாழக்கிழமைகளில் வழங்கப்படும் எனவும் சமூக நலத்துறை அறிவித்துள்ளது.