பழனி கோயிலில் விரைவில் 'பிரேக் தரிசன' வசதி அறிமுகம்

திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விரைவில் 'பிரேக் தரிசன' வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை 1 மணி நேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கார்த்திகை, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு உள்பட முக்கிய விஷேச நாட்களில் செயல்படுத்தப்படமாட்டாது. இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி