இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் பீதி

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மேகாலயாவின் ஷில்லாங்கிற்கு இண்டிகோ விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரானது. விமான பணியாளர் ஒருவர் கழிவறையில் கடிதம் இருந்ததை கண்டெடுத்தார். அதில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக, விமானத்தில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சோதனையில் அது புரளி என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி