சென்னை செனடாப் சாலையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். இதே போல சென்னை சிபிஐ நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குடிப்பிடத்தக்கது.