வேலூர்: காட்பாடியில் உள்ள தனியார் விடுதியில் ஆந்திர மாநில மாணவன் ஒருவர் தங்கி கல்லூரியில் பயின்று வருகிறார். இவரிடம் கடந்த 6-ம் தேதி இரவு விடுதியில் அத்துமீறி நுழைந்து 5 பேர் கொண்ட கும்பல் ரூ.74 ஆயிரம், வாட்ச் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து அவர் புகார் அளித்ததில், மிரட்டி பணம் பறித்த ரோகித், பிரவீன், விக்னேஷ், அரி மற்றும் அபினாஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ரோகித் பாஜக பட்டியல் அணி மாநில துணை தலைவர் கே.ஜி.குட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.