பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் எப்போதும் கூறவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுகவில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜக - அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அவர் "பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் என் குடும்பம் நின்றது கிடையாது; உயிர் மூச்சு என்றால் அதிமுக தான், நான் விலகுவதாக வேண்டுமென்றே டிரண்டிங் செய்கின்றனர்” என்றார்.
நன்றி: நியூஸ்18