டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர் 2012இல் ஓய்வு பெற்றார். ரத்தன் டாடா மறைவிற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்ராத் சிங், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.