மாந்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட சடலம்.. மக்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவின் பால்கரில் உள்ள ஒரு மாந்தோட்டத்தில், தலை துண்டிக்கப்பட்ட இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இன்று (மார்ச் 30) காலை பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கிடந்துள்ளது. இறந்தவர் 30-35 வயதுடையவர் என்றும், தலை துண்டிக்கப்பட்டதால் அடையாளம் காண முடியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது வலது கையில் 'அசோக் சிங்' என பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரை அடையாளம் காண காவல்துறை விசாரணை நடத்தி, பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளது.

தொடர்புடைய செய்தி