மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 சுற்றுகள் முடிவில், மொத்தமாக 19 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்தார். அவருக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் 2-ம் இடம் பிடித்த அரவிந்த் திவாகருக்கு (15 காளைகள்) பைக் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்குச் சொந்தமான மாட்டின் வளர்ப்பாளர் மலையாண்டிக்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது.