விஜய் உயிரோடு இருக்கும்வரை அவர்தான் முதல்வர்.. செங்கோட்டையன்

சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தவெக நிர்வாகியும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அவர்கள் மட்டுமே முதலமைச்சர்களாகவும் கட்சியின் ஒற்றைத் தலைமையாகவும் இருந்தனர். அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை விஜய் இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர், அவரே கட்சியின் உச்சபட்ச தலைவர்" என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி