நைஜீரியாவின் குவாரா வோரோ கிராமத்தில் புகுந்த ஆயுத கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். கடைகள் மற்றும் அரண்மனைக்கு தீ வைத்த கும்பல், பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலால் கிராமமே போர்க்களமானது. 13 உடல்கள் மீட்கப்பட்டதை உறுதி செய்த காவல்துறை, இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த துயர சம்பவம் நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.