பின்னர் துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி பார்த்தபோது ஒரு பெண்ணின் சடலம் கிடப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தா. பேட்டை போலீசார் கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டிருந்த சிறு பாலத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி பார்த்த போது உடல் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது. இறந்து கிடந்த சடலம் நல்லம்மாள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நல்லம்மாள் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நல்லம்மாள் இறப்பு குறித்து போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?