திருச்சி ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தற்கொலை

திருச்சி வடக்கு தாராநல்லூர் அம்மன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டுமுத்து மகன் கனகராஜ் வயது 27 பிஎஸ்என்எல் இல் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் ஆகி தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கனகராஜ் ஆன்லைன் ரம்மி விளையாடுவது வழக்கமாக கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான பணத்தை அவர் இழந்ததாகவும் கூறப்படுகிறது.

 இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிக்குச் சென்ற இவரது மனைவி திரும்பி வந்து பார்த்தபோது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததைக் கண்டு கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாலக்கரை காவல் நிலைய போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து ஆன்லைன் ரம்மி பணம் இழப்பால் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி