துறையூர்: கொலை வழக்கில் 18 மாதங்களுக்கு பின் குற்றவாளி கைது

திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு புதியதாக வீடு கட்டினார். இந்த புதிய வீட்டின் கட்டிடப் பணியில் பீகாரைச் சேர்ந்த சிண்டு என்கிற சோட்டு சச்சின் என்கிற சச்சின் குமார் ஆகிய இருவரும் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவருக்கும் கட்டிடப் பணியின் பணி மேற்பார்வையாளரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தரம் சர்மா என்பவர் முறையாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இரண்டு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தைக் கேட்டு இருவரும் தரம் சர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 21.09.2023 அன்று ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து தரம் சர்மாவை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து இருவரும் அவர்களது சொந்த ஊருக்குத் தப்பித்துச் சென்றனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சச்சின் குமார் 18 மாதங்களுக்குப் பிறகு திருச்சிக்கு ரயிலில் வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று (மார்ச் 23) இரவு திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் வைத்து சச்சின் குமாரை துறையூர் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி