திருச்சி: சிறுமியிடம் பேசிய வாலிபரை தாக்கிய உறவினர்கள்

திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் தளபதி வயது 26 இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் சிறுமியை வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை சிறுமி திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது தளபதி சிறுமியிடம் வந்து பேசி உள்ளார். இதனைக் கண்ட சிறுமியின் உறவினர்கள் தளபதியை பிடித்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து தளபதி அளித்த புகார் பேரில் சிறுமி தரப்பினர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியிடம் தேவையில்லாமல் பேசியதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தளபதி மீது போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி