கலைவாணர் தெருவில் உள்ள சலூன் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். மேலும் மாம்பழச்சாலையில் உள்ள ஒரு கடையின் பணத்தை திருடிச் சென்றனர். இந்நிலையில் நேற்று (ஜனவரி 3) காலை கடைகளை திறக்கச் சென்ற வியாபாரிகள் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று திருட்டு நடைபெற்ற ஐந்து கடைகளிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.