மேலும் இவ்வாறு மறிக்கப்படுவதால் தண்ணீர் செல்லாத வாய்க்கால் பகுதியில் உள்ளவர்களின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அங்குள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் அகல பாதாளத்திற்கு சென்றுவிடும் என்றும், வழக்கம் போல 2 வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்லும்படி தடுப்பணையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கடந்த வாரம் மனு கொடுத்திருந்தனர். இந்த மனு மீது அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தவர்கள் நூதன முறையில் மனு கொடுப்பதற்காகவும், ஆட்சியரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தங்களது ராணுவ சீருடையுடன் உடலில் இலை தழைகளை கட்டிக்கொண்டு தேசிய கொடியை ஏந்தி மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.
இன்றைய பெட்ரோல், டீசல், CNG விலை நிலவரம்