பெரம்பலூர்: குழந்தையிடம் நகையை பறித்த ஜோதிடர்

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்த சின்னதுரை என்பவரது வீட்டில், ஜோதிடம் பார்ப்பதாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறியுள்ளார். அவர்கள் வேண்டாமென்று கூறியதும் சிவகுமார் செல்லும்போது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சின்னதுரையின் குழந்தையின் கையில் இருந்த ஒரு பவுன் தங்க காப்பை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது வெளியே வந்த சின்னதுரையின் மனைவி தனது குழந்தையின் கையில் காப்பு இல்லாததை பார்த்து சத்தம் போட்டு பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 1 பவுன் தங்க காப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்து பின் அவர்மீது வழக்குப்பதிவு செய்து துறையூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோன்று எவரேனும் ஜோதிடம் பார்ப்பது, குறி சொல்வது, பிச்சை கேட்பது போன்று எந்த காரணத்தைக் கூறி தங்களது வீட்டிற்கு வந்தாலும் அவர்களிடம் ஜாக்கிரதையாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி