ஓட்டுநர் நயினார் லாரியை அப்படியே நிறுத்திவிட்டு கீழே இறங்கி உயிர் தப்பினார். லாரியின் பின்பக்கம் மரபாடி முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியதால் சாலையின் இரு புறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கத் தொடங்கியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து. பரவாமல் தடுத்தனர். ஆனால் லாரி எரிந்து எலும்புக் கூடானது.
இந்த தீ விபத்துகுறித்து பெரம்பலூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீராகி வாகனங்கள் செல்ல தொடங்கின. இச்சம்பவத்தினால் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.