துறையூரில் பெண்ணை தாக்கி 9 சவரன் நகை பறிப்பு

துறையூர் அருகே தனியாக இருந்த பெண்ணிடம் ஒன்பது பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு டூவீலரில் தப்பிச்சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பூவிலங்கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர், இவர் மனைவி பொன்மலர். இவர்கள் துறையூர் அருகே சர்பிடி தியாகராயர் நகர் பகுதியில் பட்டி அமைத்து ஆடு மேய்த்து வருகின்றனர். 

நேற்று(டிச.4) காலை ராமர் ஆடு மேய்க்கச் சென்றிருந்தார். பொன்மலர் மட்டும் தனியாக இருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு டூவீலரில் சென்ற இரண்டு இளைஞர்கள் பொன்மலர் கழுத்திலிருந்து ஒன்பது பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். அப்போது சத்தம் போட்டதால் அவர்களிடமிருந்து மல்லுக்கட்டிய பொன்மலரின் தலையில் அவர்கள் தாக்கி விட்டு டூவீலரில் தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொன்மலரை அருகிலிருந்தவர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். இதுதொடர்பாக துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி