இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஏற்றும் மினி வேன் ஒன்று அந்த தெப்பக்குளத்தில் உள்ளே மூழ்கியுள்ளது, இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் உள்ளே வாகனம் இறங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் சமயபுரம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வந்து வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் அப்போது வாகனத்தில் உள்ளே யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் இந்த வாகனம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. வாகனத்தை யார் அங்கு நிறுத்தியது வாகனம் தானாக தெப்பக்குளத்தில் உள்ளே இறங்கியதா யாரேனும் வாகனத்தை உள்ளே தள்ளிவிட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.