அப்பொழுது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அங்கே மேம்பால பணிகள் நடந்து கொண்டிருந்ததால் சர்வீஸ் சாலையில் வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம், இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளாகி - சம்பவ இடத்திலேயே அருண் மில்டன் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனை அடுத்து அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து பாடலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் உயிரிழந்த அருண் மில்டன் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து நடந்தது எப்படி? விபத்து ஏற்படுத்திய வாகனம் எது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.